டெல்லி நொய்டா செக்டார் 122 ஷ்ராமிக் குஞ்சில் வசிக்கும் பசந்த் ஷர்மா இந்திய ரயில்வேயில் பணிபுரிகிறார். இவருக்கு மூன்று மாத மின் கட்டணம் ₹4 கோடிக்கு மேல் என குறுஞ்செய்தி கிடைத்துள்ளது.
ஜூலை 18 ஆம் தேதி அன்று காலை 11:30 மணியளவில், அவரது மனைவி பிரியங்கா ஷர்மாவிற்கு எஸ்எம்எஸ் வந்ததாக தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக ஒரு மாதத்திற்கு, ₹1490 பில் பெறுபவாருக்கு, இந்த முறை ₹4 கோடிக்கு மேல் தொகை என்பது அவருக்கு அதிர்ச்சியளிதுள்ளது மேலும் இதற்கு குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் உமேஷ் சர்மா மூலம். உத்தரப் பிரதேச மின்சார வாரியத்திடம் விளக்கம் கேட்டுள்ளார்.வாடகை வீட்டில் குத்தகை்கு இருக்கும் அவர் அடிப்படை உபகரணங்களை மட்டுமே பயன்படுத்திவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு உத்தரப் பிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (UPPCL) நிர்வாகப் பொறியாளர் ஷிவா திரிபாதி கூறியதாவது ”கணினி அமைப்பில் சில தொழில்நுட்பப் கோளாறால் தவறு நிதழ்ந்து” என தெளிவு படுத்தியிருக்கிறார்.