Homeசெய்திகள்தமிழ்நாடுஜெகபர் அலி  இறப்புக்கு நீதி வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி

ஜெகபர் அலி  இறப்புக்கு நீதி வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி

-

- Advertisement -

ஜெபகர் அலி அவர்களின் மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்  தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளாா். ஜெகபர் அலி  இறப்புக்கு நீதி வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி

அது குறித்து தனது பதிவில் – புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் அஇஅதிமுக ஒன்றிய குழு உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்ட  அமைச்சூர் கபடி கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான  திரு.ஜெபகர் அலி அவர்கள் , சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் சமூக விரோதிகள் லாரி ஏற்று படு கொலை செய்திருக்கிறார்கள் என்ற செய்தி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை திசை திருப்பி வருகிறது இந்த விடியா அரசு.

கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. திரு. ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

மக்களுடன் முதல்வர் திட்டம்: ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு!

MUST READ