Homeசெய்திகள்தமிழ்நாடுதாமரை சின்னம் வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்!

தாமரை சின்னம் வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்!

-

 

தேசிய மலரான தாமரையை பா.ஜ.க.வின் தேர்தல் சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

45 வயதிலும் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் நடிகை ஜோதிகா!

தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி எனவும், நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுபடுத்துவது எனக் கூறி நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசியலிஸ கட்சியின் நிறுவனத் தலைவருமான ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், பா.ஜ.க.விற்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்ததைக் கோரி, கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார். தனது மனுவைப் பரிசீலித்து பா.ஜ.க.விற்கு ஒதுக்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்துச் செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

மீண்டும் இணைகிறதா ‘கோமாளி’ பட கூட்டணி?

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் தாமரை தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சில மாநில அரசுகளும், அதை மாநில சின்னமாக அறிவித்துள்ளனர். மேலும், தாமரை ஒரு மத சின்னம் என்பதால் பா.ஜ.க.விற்கு தாமரை சின்னம் ஒதுக்கியது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படியும், சின்னங்கள் ஒதுக்கீட்டின் உத்தரவு படியும் தவறு மட்டுமல்லாமல், அரசு சின்னங்களில் தாமரை இடம் பெற்றுள்ளதால் இது தேர்தல் நடத்தை விதிகளை மீறியது ஆகும் என்று வாதிடப்பட்டது.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

MUST READ