
வரும் மே 20- ஆம் தேதி அன்று மதியம் 12.30 மணிக்கு கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில், முதலமைச்சராக சித்தராமையா இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள சித்தராமையா குறித்து விரிவாகப் பார்ப்போம்!
அதைத் தொடர்ந்து, துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் மற்றும் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்கின்றனர். இந்த பதவியேற்பு விழாவில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர்.
இந்த நிலையில், வரும் மே 21- ஆம் தேதி அன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுநாளையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தையின் நினைவிடத்திற்கு சென்று மலரவளையம் வைத்து ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தவிருக்கிறார்.
கர்நாடகா முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு!
அதைத் தொடர்ந்து, சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ராகுல் காந்தி சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், அன்றைய தினம் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.