நாகையில் நள்ளிரவில் பெய்த மழையால் இன்று நடைபெற இருந்த ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு உடற்தகுதி தேர்வு நிறுத்தப்பட்டுள்ளது.அக்னிவேர் திட்டத்தின் மூலமாக நான்கு ஆண்டுக்கு பணிபுரியக்கூடிய அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகமானது நடைபெற்று வந்தது. குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த கிட்டத்தட்ட அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை என 17 மாவட்டத்தில் சேர்ந்த 6,000 பேர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அப்படி தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 18 ஆம் தேதி முதல் அதாவது நேற்றியிலிருந்து வருகின்ற 26 ஆம் தேதி வரை உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனையானது நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாளுக்கும் இரண்டு மாவட்டம் அல்லது மூன்று மாவட்டத்தில் சேர்ந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்றியை தினம் கிட்டதட்ட 400 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக இன்றிய தினம் வந்து இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கானோர் மாவட்ட விளையாட்டு அரங்கில் காத்து இருந்தன.
நாகப்பட்டினத்தில் நேற்று விடிய விடிய மழை தொடங்கியதால் நள்ளிரவில் ஒரு மணிக்கு தொடங்க கூடிய உடற்தேர்வு தகுதி தேர்வானது நிறுத்தப்பட்டது. மைதான முழுவதும் மழை நீர் தேங்கி இருப்பதால் ஓடுதல் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மழைநீர் சேறு சகதிமா இருப்பதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அந்த மைதானத்தில் சரிசெய்யும் பணியை அங்கு இருக்கக்கூடிய பணியாளர்கள் ஈடுபட்டு கொண்டு வருகிறார்கள். இதேபோல வருகின்ற 26ஆம் தேதி வரைக்கும் இந்த நோ்காணலது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கடந்த 19 ஆம் தேதி நடைபெற இருக்கக்கூடிய இன்ற தினம் தகுதி தேர்வு நடைபெறுவதற்க்காக வருகை தந்து இருக்கிறார்கள், அவர்களுக்கு இன்றிய தினம் நடத்தப்படுமா அல்லது மைதானம் மாலைக்குள் சரிசெய்யப்படும் என்று ஒரு கேள்வி எழுந்து இருக்கிறது. மைதானம் சரிசெய்யப்பட்டு பிறகு அவர்களுக்கான உடல் தேர்வானது நடைபெறும் அதனை தொடர்ந்து மறுநாள் நாளை தினத்துக்காக வந்து இருக்கக்கூடியவர்கள் இன்றிய இரவு அவர்கள் வெளியே தங்கி இருக்கக்கூடிய பார்க்க முடிகிறது. வருகின்ற 20ஆம் தேதி, 21ஆம் தேதி, 22ஆம் தேதி என 26ஆம் தேதி வரைக்கும் இந்த ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு உடற்தகுதி தேர்வானது நடைபெற்று அவர்கள் தேர்வு செய்யப்படுபவர்கள் விமானபடை, கடற்படை உள்ளிட்ட மூன்று துறைகளில் பணியாற்றுவார்கள் என்று குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் இன்று மாலையானது உடற்தகுதி தேர்வு நடைபெறும் எனவும் ராணுவ தரப்பில் இருக்கக்கூடிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.