spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு”எண்ணூர் அனல்மின் நிலையத்தை நிரந்தரமாக இழுத்து மூடுவதே அறிவார்ந்த செயலாகும்!” – வேல்முருகன் வலியுறுத்தல்

”எண்ணூர் அனல்மின் நிலையத்தை நிரந்தரமாக இழுத்து மூடுவதே அறிவார்ந்த செயலாகும்!” – வேல்முருகன் வலியுறுத்தல்

-

- Advertisement -

எண்ணூரில் அனல்மின் நிலைய விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு பெரும் வேதனை அளிக்கிறது. மேலும், அனல்மின் நிலையத்தை நிரந்தரமாக இழுத்து மூடுவதே அறிவார்ந்த செயலாகும் என வேல்முருகன் விலியுறுத்தியுள்ளாா்.”எண்ணூர் அனல்மின் நிலையத்தை நிரந்தரமாக இழுத்து மூடுவதே அறிவார்ந்த செயலாகும்!” – வேல்முருகன் வலியுறுத்தல்தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”எண்ணூர் மணலியில் வெறும் 20 சதுர கிலோ மீட்டர் பரப்பில் இரண்டு பெரிய அனல் மின் நிலையங்கள், மூன்று துறைமுகங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள், உரத் தொழிற்சாலைகள், சிமெண்ட் தொழிற்சாலை, பாலிமர் மற்றும் இரசாயன ஆலைகள், வாகனத் தொழிற்சாலை, நிலக்கரி சேமிப்பிடங்கள் எனச் சூழலைப் பாதிக்கும் 40க்கும் மேற்பட்ட அபாயகரமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

ஒரு காலத்தில் விவசாய பூமியாக இருந்த செப்பாக்கம் போன்ற கிராமங்கள் கூட தற்பொழுது அனல் மின்நிலைய சாம்பலால் சூழப்பட்டு மரம், செடி கூட வளர முடியாத சாம்பல் பாலைவனமாக மாறியுள்ளது.

we-r-hiring

மின்சாரம்- வளர்ச்சி என்ற பெயரில் சுவாசிக்க நல்ல காற்று கிடைக்காமல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மூச்சுத்திணறும் நிலைக்கு வட சென்னை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அனல்மின்சாரம் மூலம் சில நூறு பேருக்கு தற்காலிக வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஏன் பல ஆயிரம் பேர் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், சுற்றுச்சூழல் அமைப்புகளும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.

மேலும், எண்ணூர் அனல்மின் நிலையத்தில் விரிவாக்கப்பணிகளோ, புதிய கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் வட சென்னையை பெரிதும் பாதிக்கும் அந்த அனல்மின் நிலையத்தை இழுத்து மூட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரப்படுகிறது.

அதனையெல்லாம் சிறிதும் கவனத்தில் கொள்ளாமல், தற்போது எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் அங்கு சில கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அனல்மின் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த சாரம் சரிந்து விழுந்து, கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். அவர்களை அவரது சொந்த மாநிலங்களுக்கே திருப்பி அனுப்ப வேண்டும். மண்ணின் மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாட்டில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.

ஆனால், வடமாநிலத்தவர்களின் உயிரிழப்பு என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போது வடமாநிலத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு என்பது பெரும் வேதனை அளிக்கிறது.

இதனைத்தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 இலட்சம் இழப்பீடும், இறந்தவர்களின் உடல்கள், அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றிருப்பது வரவேற்கதக்கது.

அதே நேரத்தில், எண்ணூர் அனல்மின் நிலையத்தை சுற்றியுள்ள வடசென்னை பகுதிகளில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உடல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல் சீரழிந்து போய்விட்டது. நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.

எண்ணூர் அனல் மின் நிலையங்களில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க 6 முதல் 8 ருபாய் வரை ஆகும். ஆனால், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் அண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக தற்பொழுது சூரிய ஆற்றலில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க 3 ரூபாய்க்கு குறைவாக தான் செலவாவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

இப்படி அரசின் பொருளாதாரத்திற்கு நன்மை தரக்கூடிய புதுப்பிக்கத்தக்க ஆற்றலைக்கொண்டு மின்சாரம் தயாரிக்காமல், மீண்டும் நிலக்கரி  அனல்மின் நிலையங்களை நிறுவுவது மக்களின் ஆரோக்கியத்தையும் இயற்கை வளத்தையும் அழிக்கும் செயலாகும்.

எனவே, எண்ணூர் அனல்மின் நிலையத்தை நிரந்தமாக இழுத்து மூடுவதோடு, அதில் பணியாற்றி வரும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். அதில் பணியாற்றி வரும் மண்ணின் மக்களுக்கு, மாற்றுப் பணிகள் வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.

தனுஷ் இயக்கிய ‘இட்லி கடை’ ஹிட்டா? ஃப்ளாப்பா?…. திரை விமர்சனம்!

MUST READ