Homeசெய்திகள்தமிழ்நாடு"அடுத்தடுத்து இரண்டு பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்துள்ளது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

“அடுத்தடுத்து இரண்டு பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்துள்ளது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

-

- Advertisement -

 

"அடுத்தடுத்து இரண்டு பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்துள்ளது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
Photo: TN GOVT

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.19) காலை 11.00 மணிக்கு தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

விஜய்-க்கு தங்கையாக நடிக்கும் சுந்தர் சி பட நடிகை…. ‘தளபதி 68’ அப்டேட்!

அப்போது முதலமைச்சர் கூறியதாவது, “தென் மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட மழைப்பொழிவு மிக அதிகமாக இருந்தது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை விட பல மடங்கு அதிக மழை தென் மாவட்டங்களில் பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை தாமதமாகவே கிடைத்தது.

தமிழக அரசின் நடவடிக்கைகளால் தான் பாதிப்பு பெரிய அளவில் குறைந்தது. நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மிக்ஜாம் புயல், தென்மாவட்ட மழை என அடுத்தடுத்து இரு பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்துள்ளது. குடியரசுத் தலைவர் ஆய்வு நடத்தினால் பிரதமரின் ரியாக்ஷ்ன் என்னவோ, அதே தான் எனது ரியாக்ஷன்.

சூப்பர் ஸ்டார் பட்டத்தில் என்ன பெருமை இருக்கிறது…. வைரலாகும் பிரபல நடிகையின் பேச்சு!

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை (டிச.20) நேரில் ஆய்வுச் செய்கிறேன். சென்னையில் எவ்வளவு விரைவாக மீட்புப் பணிகள் நடந்ததோ, அதே அளவுக்கு தென் மாவட்டங்களில் நடக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ