Homeசெய்திகள்தமிழ்நாடுபெண்களை ஏமாற்றி பணம், தங்க நகைகளை வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த நபர் கைது!

பெண்களை ஏமாற்றி பணம், தங்க நகைகளை வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த நபர் கைது!

-

- Advertisement -

 

பெண்களை ஏமாற்றி பணம், தங்க நகைகளை வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த நபர் கைது!

மேட்ரிமோனியில் இரண்டாவது திருமணத்திற்காகப் பதிவுச் செய்துள்ள பெண்களைக் குறி வைத்து தமிழகம் முழுவதும் 80- க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி நகை, பணம் உள்ளிட்டவற்றை மோசடி செய்த போலி இன்ஜினியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

டெல்லி காவல்துறைக்கு நன்றி தெரிவித்த நடிகை ராஷ்மிகா மந்தனா

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே ஒரு பெண்ணிடம் திருமண பதிவுத் தளம் மூலம் அறிமுகமான சக்கரவர்த்தி என்ற இளைஞர் திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி 20 சவரன் தங்க நகைகளை மோசடி செய்து ஏமாற்றியுள்ளார். இது குறித்து கடந்த 2023- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருவிடைமருதூர் காவல்துறையில், அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் சக்கரவர்த்தியைத் தேடி வந்த தனிப்படை காவல்துறையினர், அவரை திருவிடைமருதூர் அருகே கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அந்த நபர், 12- ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளது தெரிய வந்தது.

சென்னையில் இன்ஜினியராக பணியாற்றிக் கொண்டிருப்பதாகக் கூறிக் கொண்டு திருமண பதிவுத் தளத்தில் இரண்டாவது திருமணம் செய்வதற்கு பதிவுச் செய்த பெண்களைக் குறி வைத்து அவர்களின் நகை மற்றும் பணத்தை ஏமாற்றியதுடன், அதன் மூலம் சொகுசு கார் மற்றும் நட்சத்திர விடுதி என ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.

மகளுடன் சேர்ந்து மோடியை சந்தித்த நடிகர் அர்ஜூன்

சக்கரவர்த்தி மீது பல்வேறு மாவட்டங்களில் 80- க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்து 15 சவரன் நகைகள், ரூபாய் 1 லட்சம் ரொக்கம், கார் மற்றும் செல்போனை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அவர் செல்போனை ஆய்வுச் செய்ததில் 80- க்கும் மேற்பட்ட பெண்களுடன் அவர் சேர்த்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

MUST READ