spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்ணாமலை ஓட்டுப்பிச்சைக்காக தன்னைத்தானே அடித்து கழிவிரக்கத்தை தேடுகிறார் – வன்னி அரசு கடும் விமர்சனம்

அண்ணாமலை ஓட்டுப்பிச்சைக்காக தன்னைத்தானே அடித்து கழிவிரக்கத்தை தேடுகிறார் – வன்னி அரசு கடும் விமர்சனம்

-

- Advertisement -

பாஜகவின் தமிழ்நாடு தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் ஓட்டுப்பிச்சை எடுப்பதற்காக இப்படி தன்னைத்தானே அடித்து கழிவிரக்கத்தை தேடுகிறார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயளாலர் வன்னி அரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் விமர்சித்துள்ளார்.அண்ணாமலை ஓட்டுப்பிச்சைக்காக தன்னைத்தானே அடித்து கழிவிரக்கத்தை தேடுகிறார் – வன்னி அரசு கடும் விமர்சனம்

அது குறித்து அவர் தனது பதிவில் மனிதனை மனிதன் கை ரிக்‌ஷா கொண்டு இழுக்கக்கூடாது என அவற்றை தடை விதித்தவர் சமத்துவப்பெரியார் கலைஞர் அவர்கள்.அதே போல சாலைகளில் சாட்டையால் அடித்து பிச்சை எடுப்பவர்களை தடுத்து மறுவாழ்வுக்கான வழிகாட்டியவர் கலைஞர் அவர்கள்.

we-r-hiring

இன்று தமிழ்நாட்டில் இப்படி சாட்டையால் அடித்து பிச்சை எடுப்பதை காண்பது அரிது. ஆனால், பாஜகவின் தமிழ்நாடு தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் ஓட்டுப்பிச்சை எடுப்பதற்காக இப்படி தன்னைத்தானே அடித்து கழிவிரக்கத்தை தேடுகிறார்.

தெருக்களில் சாட்டையால் அடித்து பிச்சை கேட்பவர்களை விட, திரு.அண்ணாமலையின் செயல்பாடு அநாகரீகமானது. இப்படி செய்பவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

அல்லது கவன  ஈர்ப்புக்காக செய்பவர்களாக இருக்க வேண்டும். இதில் பாஜகவும் அண்ணாமலையும் என்ன ரகம் என்பதை மக்களே புரிந்து கொள்ளட்டும் என வன்னி அரசு தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

MUST READ