நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தள்ளி வைத்தது.நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தது. இந்த மேல் முறையீட்டு மனுவுக்கு ஜூன் 3ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, நடிகர் பிரபு மற்றும் அவரது சகோதரர் ராம்குமார் உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், சட்ட விதிகளை கருத்தில் கொள்ளாமல் ஜப்தி உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்தியாவில் அதிவேக இணையம்: ஸ்பேஸ் எக்ஸுடன் ஒப்பந்தம் செய்து ஸ்டார்லிங் சேவைக்கு வழிவகுக்கும் ஜியோ!