- Advertisement -
கர்நாடகா தேர்தல்- அண்ணாமலை பிரச்சாரம் செய்ய தடை விதிக்கக்கோரி கடிதம்
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என கடந்த மார்ச் 29 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அரசியல் கட்சிகள் மாநிலம் முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளது. கடிதத்தில், காவல்துறையில் இருந்தபோது கர்நாடகாவில் சில பகுதிகளில் அண்ணாமலை பணியாற்றியதாகவும், தேர்தல் பணியில் உள்ள காவல்துறையினர் அவருக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்பு எனவும் குறிப்பிட்டுள்ளது.