ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் குழந்தையை காப்பாற்ற சென்ற தாய் மற்றும் தாயின் சகோதரி தண்ணீரில் அடித்து சென்று பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தை உயிருடன் மீட்பு!ஆவடி அருகே மோரை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை இவரது மனைவி சுகுணா இருவருக்கும் சந்தோஷ் என்ற நான்கு வயது ஆண் குழந்தை உள்ளது சுகுணா வழக்கம் போல் மோரை கிராமம் வழியாக செல்லும் கிருஷ்ணா கால்வாயில் துணி துவைக்க தனது நான்கு வயது குழந்தையுடன் சென்றுள்ளார். சுகுணா துணி துவைத்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மகன் சந்தோஷ் தண்ணீரில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்டார் இதனைக் கண்டு பதறி அடித்த சுகுணா குழந்தையை காப்பாற்ற தண்ணீரில் குளித்துள்ளார். குழந்தை மற்றும் தனது அக்கா தண்ணீரில் குதிப்பதை கண்ட சுகுணாவின் தங்கை அஞ்சனா/17 என்பவரும் தண்ணீரில் குதித்துள்ளார், கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் குழந்தை சந்தோஷை காப்பாற்றிய நிலையில் தாய் சுகுணா மற்றும் அவரது சகோதரி அஞ்சனா தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.
100 அடி தொலைவுக்கு அடித்து செல்லப்பட்ட இருவரையும் கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மீட்ட நிலையில் இருவரும் பரிதாபமாக இறந்து போயிருந்தனர். இறந்து போன சகோதரி அஞ்சனா நர்சிங் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி டாங்க் பேக்ட்டரி போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணா கால்வாயில் குழந்தையுடன் துணி துவைக்க வந்த தாய் மற்றும் அவரது சகோதரி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக இறந்து போனது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நகராட்சியில் 311 மனுக்கள்…. நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
