Homeசெய்திகள்சென்னைமெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்து! விபத்தில் சிக்கியவர்கள் யார் யார்?

மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்து! விபத்தில் சிக்கியவர்கள் யார் யார்?

-

- Advertisement -

சென்னை ராமாபுரத்தின் மெட்ரோ ரயில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழப்பு மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்து! விபத்தில் சிக்கியவர்கள் யார் யார்?மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஜி எம் ஆர் என்ற தனியார் நிறுவனம் இந்த மெட்ரோ ரயில் மேம்பால பணிகளை கட்டி வரும் நிலையில் ஏறக்குறைய 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஏற்கனவே  பூந்தமல்லி முதல் போரூர் வரை சோதனை ஓட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த நிலையில் மீதமுள்ள வழிதடங்களிலும் சோதனை ஓட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில் சென்னை ராமாபுரத்தில் திடீரென மெட்ரோ ரயில் மேம்பாலம் இடிந்து விழுந்துள்ளது கிண்டில் இருந்து பூந்தமல்லி நோக்கி செல்லும் சாலையில் மேம்பாலம் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் சிக்கிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது .

ஒருவர் உயிரிழந்துள்ளாா் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு சிலர் சிக்கி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விபத்து காரணமாக பூந்தமல்லி மவுண்ட் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விபத்து நடைபெற்ற இடத்தை காவல்துறையினர் சுற்றி வளைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதேபோன்று, கீழே விழுந்த மேம்பால தூண்கள் சுமார் 50 டன் இல் இருந்து 100 டன் இருக்கும் என்பதால் அதனை உடனடியாக அகற்ற முடியாததால் தூண்களை ட்ரில்லிங் இயந்திரம் மூலம் துண்டு துண்டுகளாக உடைத்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் கொண்ட பூந்தமல்லி சாலையில் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதால் அவ்வழியாக ராட்சத கிரகங்களை கொண்டுவர முடியாததால் தற்போது கீழே விழுந்து துணை மெட்ரோ ரயில் நிறுவனம் இடித்து வருகிறது. கீழே விழுந்த மேம்பாலத்தை அப்புறப்படுத்தினால் மட்டுமே எத்தனை பேர் இதில் இருக்கிறார்கள் என்பது தெரியவரும் .மேலும், இந்த விபத்தின் போது பலர் நூல் இலையில் உயிர் தப்பியதும் தெரியவந்துள்ளது.

மெட்ரோ ரயில் திட்ட பணியில் சாலையில் தூண்கள் மட்டுமே அங்கு கட்டப்பட்டது மேலே வைக்கக்கூடிய குறுக்கு தூண்கள் பூந்தமல்லி அருகே தயார் செய்யப்பட்டு ராட்சத வாகனங்கள் மூலம் இரவு நேரங்களில் கொண்டுவரப்பட்டு தூண்கள் மீது குறுக்கே வைக்கப்பட்டு மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், விபத்து ஏற்பட்ட குறுக்கு தூண்கள் முறையாக பொருத்தாததால் திடீரென சாலையில் இடிந்து விழுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தினால் மட்டுமே மேம்பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணங்கள் தெரியவரும். அதே போல் விபத்தில் சிக்கியவர்கள் யார் யார் என்பது குறித்தும் உடல்களை மீட்டால் மட்டுமே தெரியவரும் என கூறப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் திடீரென மெட்ரோ ரயில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குருமூர்த்தி சமாதானப்பேச்சுவார்த்தை டிரா.. கூட்டணியை நானே முடிவு செய்வேன்.. டாக்டர் ராமதாஸ் உறுதி

MUST READ