Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் வலியுறுத்தல்

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் வலியுறுத்தல்

-

- Advertisement -

அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தினார்.ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் வலியுறுத்தல்ஒன்றிய பாஜக அரசு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலை திட்டத்திற்கு வழங்க வேண்டிய 3 ஆயிரம் கோடி ரூபாயை பாக்கு தொகையை விடுவித்திட வேண்டும். ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான பள்ளிக் கல்வி நிதி, இரண்டாயிரம் கோடியை வழங்கிட வேண்டும் மற்றும் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்த மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு அலுவலமான சாஸ்திரி பவனை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தின் போது, ஒன்றிய அரசுக்கு எதிரான வாசகங்கள் எழுதிய பதாகை ஏந்தியும்,  ஒன்றிய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். பின்னர், மாநில செயலாளர் சண்முகம் ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது, ஆளுநர் மாநாட்டில் அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கலந்து கொள்ளாமல், புறக்கணித்து இருப்பது பாராட்டுக்கு உரியது. சட்டத்திற்கு விரோதமாக துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் கூட்டியுள்ளோர். இனி ஒரு நொடி கூட ஆளுநர் ஆர்.என். ரவி தொடரகூடாது என நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று சண்முகம் தெரிவித்தார்.

இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை புகுத்துவதால் தான் மத்திய அரசின் ஆதரவில் ஆளுநர் தமிழகத்தில் நீடிக்கிறார் என்றார். மேலும், உடனடியாக 3,796 கோடி ரூபாய் நூறு நாள் வேலை திட்டத்திற்கான நிதியும், அதே போல் பள்ளிக் கல்விக்கு 2152 கோடி ரூபாய் வழங்காமல் இருப்பதை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றார்.

அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற   போராட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வாசுகி உட்பட சென்னை மாவட்ட குழுக்களை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.

பின்னர் தடையை மீறி, சாஸ்திரி பவன் அலுவலகத்தை மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையுடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மாநாட்டை புறக்கணித்து “நானே ராஜா” என்று சூட்டிக்கொண்ட  மகுடம் கீழே இறக்கிய துணைவேந்தர்கள்!

MUST READ