தனியார் பள்ளியிலிருந்து சென்னை மாநகராட்சி பள்ளியில் பயின்று 12ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவிகள் தனியார் பள்ளிகளை விட சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கற்பித்தல் முறை சிறப்பாக உள்ளது என மாணவிகள் நெகிழ்ச்சியுடன் பேட்டியளித்தனர்.10ம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் பயின்று, 11 மற்றும் 12ம் வகுப்பு அரசு பள்ளிகளில் படித்து சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2 மற்றும் 3ம் இடம் பெற்று மாணவிகள் சாதித்துள்ளனா். குடும்ப சூழ்நிலைக் காரணமாக தனியார் பள்ளியிலிருந்து சென்னை மாநகராட்சி பள்ளியில் பயின்று மாணவிகள் சாதனை படைத்துள்ளனா்.
மமதா – 588 (சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இரண்டாம் இடம்)
ரோஷினி – 583, பூஜா – 583 (சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மூன்றாம் இடம்)

மாநகராட்சி பள்ளிகளில் பெரம்பூர் “சென்னை பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் மமதா இரண்டாம் இடமும், ரோஷினி, பூஜா ஆகியோர் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.
தனியார் பள்ளியில் படிக்காமல் அரசு பள்ளியில் பயின்றிருந்தால் 7.5 சதவீத இடஒதுக்கீடு, புதுமைப்பெண் திட்டம் போன்ற அரசின் திட்டங்கள் கிடைத்திருக்கும் 11 மற்றும் 12ம் வகுப்பு மட்டும் அரசு பள்ளியில் படித்ததால் கிடைக்கவில்லை என மாணவிகள் ஏமாற்றம்.
10ம் வகுப்பில் தனியார் பள்ளியில் பயின்று 430 மதிப்பெண் பெற்ற மாணவி மமதா தற்போது சென்னை மாநகராட்சி பள்ளியில் பயின்று 588 மதிப்பெண் பெற்று சென்னை மாநகராட்சி பள்ளியில் இரண்டாம் இடம் பெற்று சாதித்துள்ளார்.
தனியார் பள்ளிகளை விட சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கற்பித்தல் முறை சிறப்பாக உள்ளது என மாணவிகள் நெகிழ்ச்சி. தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் மாநகராட்சி பள்ளியில் சேர்த்த போது கஷ்டமாக இருந்தது என்றும் தற்போது நல்ல மதிப்பெண் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என மாணவிகளின் பெற்றோர்கள் நா தழுதழுக்க பேட்டியளித்தனர்.
பொதுத் தேர்வில் தவறியோர் மனம் தளர்ந்து விடாதீர்கள் – இராமதாஸ் அறிவுரை