spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பல்லடம் அருகே பதற வைக்கும் படுகொலை...போலீசார் விசாரணை

பல்லடம் அருகே பதற வைக்கும் படுகொலை…போலீசார் விசாரணை

-

- Advertisement -

பல்லடம் அருகே பதற வைக்கும் படுகொலை...போலீசார் விசாரணைபல்லடம் அருகே தாய் தந்தை மகன் என மூன்று பேர் வெட்டி படு கொலை செய்து 8 பவுன் நகை கொள்ளை போனது. 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி. தனது தோட்டத்து வீட்டில் மனைவி அலமேலு என்கிற அலமாத்தாள் உடன் தனியாக தங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.

we-r-hiring

இவர்களது மகன் செந்தில்குமார் கோவையில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் தனது மனைவி கவிதா மற்றும் குழந்தைகளுடன் கோவையில் தங்கி வருகிறார். அவர்களது உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக நேற்று செந்தில்குமார் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். இரவு 3 பேரும் உறங்கி உள்ளனர் அப்போது தோட்டத்து பகுதியில் சப்தம் கேட்டதால் தெய்வசிகாமணி(76) முதலில் எழுந்து வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் தெய்வசிகாமணியை வெட்டி கொலை செய்துள்ளனர்.

அதனை தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற மர்ம நபர்கள் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த செந்தில் குமார்(45) மற்றும் அலமாத்தாள்(65) இருவரையும் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். அதனை அடுத்து இன்று காலை செந்தில்குமார் வரச்சொல்லியிருந்த சவரத்தொழிலாளி வீட்டில் வந்து பார்த்த போது மூவரும் பிணமாக கிடந்துள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அவினாசிபாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த பல்லடம் காவல் துறை கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் அவினாசி பாளையம் போலீசார் சடலங்களை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டினுள் பீரோ உடைக்கப்பட்டு 8 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். அவரிடம் செந்தில்குமாரின் மனைவி கவிதா கதறி அழுதபடி தனது குழந்தைகளை நான் எப்படி பார்த்துக் கொள்வேன் உறங்கிக் கொண்டிருந்த கணவரை வெட்டி கொன்று விட்டனர். அவர்களை நிச்சயம் பிடிக்க வேண்டும் பிடிக்கவில்லை எனில் காவல்துறைக்கு கேவலம் என தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தி கதறி அழுதார்.

சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை சேகரித்தும் மோப்ப நாய் மூலம் தோட்டப்பகுதிகளில் தடயங்களை சேகரித்தும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் சேலம் டி.ஐ.ஜி உமா திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் விசாரணை மேற்கொண்டனர். நேற்று இரவு சம்பவம் நடைபெற்ற பொழுது அப்பகுதியில் இணைப்பில் இருந்த செல்போன் எண்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டவர் ரேஞ்ச் தகவல்களை கணினி மூலம் சேகரித்தனர்.

மேலும் சம்பவம் நடைபெற்ற 15 ஏக்கர் தோட்டத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் தடயங்களை தீவிரமாக தேடி சோதனை இட்டனர். தடையவியல் நிபுணர்கள் கூறுகையில் 5 நபர்கள் இந்த கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் அரிவாள், இரும்பு கம்பிகள் கொண்டு பலமாக தாக்கி கொலை செய்தது தெரிய வந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்ட மூன்று பேரின் உடல்களும் சேமலை கவுண்டம்பாளையம் தோட்டத்து வீட்டில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அருகில் உள்ள இடுகாட்டில் ஏரியூட்டப்பட்டது.

கோபியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு

 

MUST READ