spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவிருத்தாசலம் போக்குவரத்து  காவலர்களுக்கு குளிர்பானம் மற்றும் பழங்கள் வழங்கிய டிஎஸ்பி

விருத்தாசலம் போக்குவரத்து  காவலர்களுக்கு குளிர்பானம் மற்றும் பழங்கள் வழங்கிய டிஎஸ்பி

-

- Advertisement -

விருத்தாசலம் போக்குவரத்து  காவலர்களுக்கு கோடை வெயிலை சமாளிக்க குளிர்பானம் மற்றும் பழங்களை வழங்கினார் டிஎஸ்பி.விருத்தாசலம் டிஎஸ்பிகோடை வெயில் தமிழக முழுவதும் சுட்டெரித்து வரும் நிலையில், சுட்டேரிக்கும் வெயிலில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவல்துறையினருக்கு வெயிலின் சூட்டை தணிக்கும் வகையில் தொப்பி, குளிர் கண்ணாடி, குளிர்பானம், தர்பூசணி பழம் ஆகியவை விருத்தாசலம் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் வழங்கினார்.விருத்தாசலம் போக்குவரத்து காவலர்கள்இதில் விருத்தாசலம் சட்டம் ஒழுங்கு காவல்துறை ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர் அய்யனார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் கோவிந்தசாமி, உதவி ஆய்வாளர்கள் முருகன், குமார் மற்றும் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்

 

MUST READ