Homeசெய்திகள்தமிழ்நாடுமுஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை ஒன்றிய அரசு கைவிடவேண்டும் – சி பி எம் அறிவுறுத்தல்!

முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை ஒன்றிய அரசு கைவிடவேண்டும் – சி பி எம் அறிவுறுத்தல்!

-

- Advertisement -

பகல்ஹாம் தாக்குதலை வைத்து இந்தியாவில் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை ஒன்றிய அரசு செய்யக்கூடாது என்று  சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளாா்.முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை ஒன்றிய அரசு கைவிடவேண்டும் – சி பி எம் அறிவுறுத்தல்!

சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  ஜி. ராமகிருஷ்ணன் மே தினத்தையொட்டி கட்சியின் செங்கொடியை ஏற்றி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எங்களது மே தின புரட்சி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.  சாதி மதம்  இனம் மொழி கடந்து உலகம் முழுவதும் கொண்டாடப்படக்கூடிய தினமாக மே தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

மே தினம் கொண்டாடும் இன்றைய  தினத்தில் இந்தியாவில் தொழிலாளர் வர்க்கமும், ஜனநாயக இயக்கமும் பல சவால்களை சந்தித்து வருகிறது. அந்த சவால்களை எல்லாம் எதிர்கொள்ள உரிமைகளுக்காக போராட உறுதியளிக்கும் நாளாக மே தினத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டாடி வருகிறது. குறிப்பாக சில தினங்களுக்கு முன்னதாக பகல்ஹாம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் தாக்கி 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒன்றிய அரசு கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கலந்துகொண்டு பயங்கரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அதே நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய அரசுக்கு விடுக்கக்கூடிய வேண்டுகோள் என்னவென்றால் பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், மக்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டும் அதே நேரத்தில் இந்தியாவில் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் செய்வதற்கு இந்த சம்பவத்தை பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்துகிறோம்.

பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை தாக்கும் போது காஷ்மீர் பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார்கள். இந்தியாவில் வாழும்  முஸ்லிம்களை கருத்தில் கொண்டு இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்த பரப்புவதை நிறுத்த வேண்டும். பாகிஸ்தான் மக்களின் 70% குடிநீர் சேவையை சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்தால் நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளது.  பயங்கரவாதிகளுக்கு எதிராக  நடவடிக்கை எடுக்கவேண்டிய  அதே நேரத்தில் சிந்து நதி ஒப்பந்தத்தை அமலாக்க மாட்டோம் என ஒன்றிய அரசு கூறுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மக்கள் தொகை கணக்கெடுப்போடு சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்போம் என்ற ஒன்றிய அரசின் முடிவு நல்ல முடிவு, இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. சம்பந்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்களுடைய சமூக பொருளாதார நிலையை கணக்கில் எடுத்துக் கொள்ளும் அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

அமெரிக்காவில் டிரம்ப்  அதிகாரத்திற்கு வந்த பிறகு பல நாடுகளின் மீது கடுமையான வரிகளை ட்ரம்ப் அறிவித்து வருகிறார். இதனால் உலக பொருளாதாரமே மிகப்பெரிய கலக்கத்தில் அதிரடியாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு அமலாக்க நினைக்கும்  வரி விதிப்பை எதிர்த்து ஒன்றிய அரசு தொழிலாளிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

கரும்புக்கு ரூ.5000 கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் – இராமதாஸ் வலியுறுத்தல்!

MUST READ