சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் ராஜாமணி என்பவரது வீட்டின் கேட் சுவர் இடிந்து விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதுள்ளனர்.
சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் ராஜாமணி என்பவரது மகள் மற்றும் அவரது உறவினரின் மகள் இருவரும் காலையில் வீட்டின் முன்பு ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் கேட்டுடன் இணைக்கப்பட்டிருந்த பில்லர் இடிந்து விழந்ததில் கமலிகா(9) மற்றும் ரிஷிகா (4) இருவரும் பெற்றோர் கண்முன்னே உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அக்குடும்பத்தாரையும் அப்பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பள்ளி விடுமுறை என்பதால் சந்தோஷகமாக விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமிகள் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. பள்ளி விடுமுறை காலம் என்பதால் பெற்றோர் தங்களது குழந்தைகளை பத்திரமான பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – வித்தியாசமாகச் சிந்தியுங்கள் – ரயன் ஹாலிடே


